புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு தீப்பிடித்ததில் ஓலை குடிசை எரிந்தது..!!
Read Time:1 Minute, 0 Second
தண்டையார்பேட்டை இரட்டைக் குழி தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது வீட்டின் 2–வது மாடிக்கு மேல் ஓலை குடிசை போட்டிருந்தார். நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த ஓலை குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தண்டையார் பேட்டை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். நேற்று நள்ளிரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெடித்த பட்டாசு தீப்பிடித்ததில் ஓலை குடிசை எரிந்தது தெரிய வந்தது.
Average Rating