மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பெண்! விசாரணையில் பொலிஸ்…!!
நாகர்கோவிலில் 10 வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 21 வயது பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் தனது தாத்தாவுடன் வசித்த வந்த 10 வயது மாணவன் மணி என்பவனுடன், அவர்களது வீட்டிற்கு அருகாமையில் வசித்து வந்த கவிதா என்ற 21 வயது பெண் பழகி வந்துள்ளார்.
நாளடைவில் அம்மாணவனுக்கு பாலியல் ஆசைகாட்டி அவனுடன் நெருங்கிப்பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது, அந்தக்குழந்தைக்கு மணி தான் தந்தை என்றும் அவனை தனக்கு திருமணம் செய்துவைக்கும்படி மணியின் தாத்தாவிடம் வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு மாணவனும், தாத்தாவும் மறுத்த நிலையில், அப்பெண் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, இதுதொடர்பாக மாணவன் பொலிசில் புகார் அளித்துள்ளான்.
அந்த புகாரில், ஒரு நாள் எனது வீட்டிற்கு வந்த அப்பெண் என்னை கட்டாயப்படுத்தி என்னுடன் உடலுறவு கொண்டார், இப்போது அதனால் குழந்தை பிறந்துள்ளதாகவும், அக்குழந்தைக்கு நான் தான் காரணம் எனக்கூறி திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துகிறார் எனவும் கூறியுள்ளான்.
இப்புகாரினை விசாரித்துவரும் இன்ஸ்பெக்டர் சுகுணா, அப்பெண் மீது பாலியதல் தாக்குதல் உள்ளிட்ட 14 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளார்.
மேலும் அக்குழந்தைக்கு அந்த மாணவன தான் காரணமா? என மருத்துவபரிசோதனையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Average Rating