குன்னத்தூர் அருகே ஒருதலை காதலால் 10–ம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து கொலை: பெயிண்டர் வெறிச்செயல்..!!

Read Time:4 Minute, 19 Second

downloadதிருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள நல்லிகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் பூரணி (16). இவர் குன்னத்தூர் அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வண்ணாரை. இவரது மனைவி செல்லம்மாள். இவர்களது மகன் ஆனந்தன் (23) பெயிண்டர். இவர் மாணவி பூரணியை ஒரு தலையாக காதலித்து வந்தார். இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மாணவி பூரணியை கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஆயிகவுண்டம் பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மாணவி பள்ளிக்கு சென்று வந்தார்.

நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மாணவி பூரணி பாட்டி வீட்டில் இருந்து சொந்த ஊரான நல்லிகவுண்டம் பாளையத்திற்கு வந்தார். மாணவி வந்த விஷயம் ஆனந்தனுக்கு தெரியவந்தது.

நேற்று இரவு நல்லிகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார். இதில் ஆனந்தன், மாணவி பூரணி உள்பட 50–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து அவரவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

நள்ளிரவு 12.15 மணியளவில் ஆனந்தன் மாணவி பூரணியின் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது பெற்றோர் தூங்கி கொண்டு இருந்தனர். மாணவி மட்டும் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருந்தார். அங்கு சென்ற ஆனந்தன், மாணவியிடம் என்னை ஏன் உனக்கு பிடிக்கவில்லை என்று கேட்டு உள்ளார்.

அப்போது அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் தான் மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் மாணவி பூரணியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அங்கிருந்து வீடு திரும்பிய ஆனந்தனும் தன்னை தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆனந்தனை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவி பூரணி கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது பெற்றோருக்கு இன்று காலை தான் தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து குன்னத்தூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு தலை காதலால் மாணவி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் உடலை மீட்டு போலீசார் குன்னத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பதட்டம் நிலவிவருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் பெண்ணுக்கு செக்ஸ் எஸ்.எம்.எஸ்.: இங்கிலாந்து எம்.பி. சஸ்பெண்ட்..!!
Next post 3வது மாடியில் இருந்து குதித்து 18 வயது இளைஞன் தற்கொலை…!!