3வது மாடியில் இருந்து குதித்து 18 வயது இளைஞன் தற்கொலை…!!
Read Time:1 Minute, 6 Second
மொனராகலை நீதவான் நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான குறித்த இளைஞர், இன்று அதிகாலை போதையில் வீட்டுக்கு சென்ற போது, பெற்றோருடன் முரண்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விரக்தியடைந்த அவர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிந்துள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating