ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமையாக இருந்த 17 வயது மாணவி கொலை…!!
சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த 17 வயது மாணவி சாம்ரா கேசினோவிக் என்பவர் இணைந்தார்.
அவர் அதில் சேர்ந்த சில மாதங்களிலேயே கொலை செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி விசாரித்த போது ஆஸ்திரியா மாணவியை புதிதாக இயக்கத்தில் சேரும் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமையாக பயன்படுத்தி வந்ததும், அங்கிருந்து தப்ப முயன்றதால் மாணவியை தீவிரவாதிகள் சுத்தியலால் தாக்கி கொன்றுவிட்டதாகவும் தெரிய வந்தது.
இதேபோல் துனிசிய நாட்டுப் பெண்ணும் செக்ஸ் அடிமையாக பயன்படுத்தப்பட்டு வந்தார். அவரும் ஆஸ்திரிய மாணவியும் ஒரே வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். ஆஸ்திரியா மாணவி கொலை செய்யப்பட்ட தகவலை துனிசிய பெண்தான் தப்பி வந்து வெளியிட்டதாக ‘தி சன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
துனிசிய பெண்ணின் பெயர் அதில் குறிப்பிடப்படவில்லை. புதிதாக இயக்கத்தில் சேருபவர்களுக்கு தன்னையும், மாணவியையும் செக்ஸ் அடிமையாக பயன்படுத்தி வந்தனர். மாணவி பலமுறை தப்ப முயன்றார். கடைசியில் அவர் தப்பிய போது தீவிரவாதிகளிடம் பிடிபட்டார். உடனே அவரை கொன்று விட்டனர் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரியாவின் வியன்னாவைச் சேர்ந்த மாணவி சாம்ரா தனது காதலன் சபினா செலி மோவிக்குடன் கடந்த 2014–ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகுதான் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து இருக்கிறார்.
Average Rating