ஐ.எஸ் தீவிரவாதிகளின் எண்ணெய் கிடங்குகள் மீது பிரான்ஸ் வான்வெளி தாக்குதல்…!!
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்க கூட்டுப்படைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 129 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது பிரான்ஸ் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இந்நிலையில் சிரியாவின் அல் ரக்கா ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் மீது பிரான்ஸ் படைகள் வான்வெளி தாக்குதல்களை நடத்தின. சிரியாவின் ஜோர்தன் பகுதியில் பிரான்சின் வான்வெளி தளத்தை அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் பார்வையிட்டார்.
ராணுவத்தினரின் தகவலின்படி அதிகாலை 2 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 2016-ம் ஆண்டின் தொடக்க நாளிலேயே பிரான்ஸ் தனது அதிரடியான தாக்குதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating