முதியோர் இல்லத்தில் மூதாட்டி சாவு: விசாரணை நடத்த கோரி மகன் போலீசில் புகார்…!!
Read Time:1 Minute, 8 Second
பழைய வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது தாய் பாப்பா (65). இவரை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் சேர்த்து இருந்தார். நேற்று பாப்பா இறந்து விட்டார். முதியோர் இல்லத்தை நடத்தும் பெண் தவமணி வெளியூர் சென்று விட்டதால் பாண்டியனுக்கு மாலை தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து பார்த்த போது பாப்பா வாயில் ரத்தம் வடிந்ததை கண்டார்.
இதுகுறித்து அவர் புது வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். தனது தாய் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். அதன்பிறகே பிணத்தை வாங்குவேன் என்று கூறினார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ண பிரபு விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating