கவுண்டம்பாளையத்தில் திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தற்கொலை..!!
கோவை கவுண்டம்பாளையம் வேலுசாமி நகரை சேர்ந்தவர் பாபு. டிராவல்ஸ் ஊழியர். இவரது மனைவி கவுசல்யா (வயது 19).
இவர்களுக்கு கடந்த 15.11.2015 அன்று திருமணம் நடந்தது. கவுசல்யா அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் அவருக்கு அறிவுரை கூறினர்.
இதனால் மனமுடைந்த கவுசல்யா நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கவுசல்யாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. ரவிசங்கர், துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கவுசல்யா தனது கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
கவிதை நடையில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் கவுசல்யா தான் வேறு ஒரு வரை காதலித்ததாகவும், பெற்றோருக்கு அது தெரிந்ததும் தனக்கு விருப்பமில்லாதவருடன் திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வ தாக கூறி இருப்பதாக போலீ சார் தெரிவித்தனர்.
தற்கொலை செய்த கவுசல்யாவின் பெற்றோர் ராஜன்– வசந்தா ஆவர். இவர்கள் மதுக்கரை பச்சாபாளையத்தை சேர்ந்தவர்கள். கவுசல்யா தற்கொலை செய்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டனர். இதுகுறித்து வசந்தா கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருமணமாகி 1½ மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. கவுசல்யாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது கணவர் குடும்பத்தினரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றார்.
Average Rating