வீட்டில் தீப்பற்றி முதியவர் பலி…!!
Read Time:46 Second
தமன – வாதேகம பிரதேச வீடொன்றில் தீப்பற்றியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறித்த வீட்டில் அவர் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, வத்தேகம – மடவலகந்த பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating