நேபாளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி…!!
Read Time:1 Minute, 14 Second
நேபாள நாட்டின் வனப்பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக பலியாகினர்.
நேபாளத்தில் இந்திய எல்லையோரம் உள்ள எல்லைப்பகுதியான ருபன்தேஹி மாவட்டத்தில் உள்ள தேவ்தாஹா வனப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த அந்த பஸ், சாலையை விட்டு விலகிச்சென்று கவிழ்ந்ததில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் பரத்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் பலியாகினர். தற்போது சிகிச்சை பெற்றுவரும் 16 பேரில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
Average Rating