ஓலா கால் டாக்சி டிரைவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது…!!
தனியார் கால் டாக்சி நிறுவனமான ‘உபேர்’ நிறுவனத்தின் டிரைவரான ஷிவ் குமார் யாதவ், நிர்பயா வழக்கில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது முன்னணி கால் டாக்சி நிறுவனமான ஓலா-வின் டிரைவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கடந்த டிசம்பர் 29-ம் தேதி ஓலா வாடகைக் காரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 28 வயது பெண் ஒருவர் சென்றுள்ளார். காரை பைராகர் மற்றும் காந்தி நகருக்கு இடையே நிறுத்திய ஓட்டுநர் தீபக் பமானே காரிலேயே அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் அந்தப் பெண் கூற, இதுகுறித்து அவரது கணவர் கோ-இ-பிசா காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் (ஜனவரி-1) புகார் செய்தார்.
இதையடுத்து, தீபக் மானே கைது செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இவர் ஓலா கேப்பில் பணிக்கு சேர்ந்தார். பாதிக்கப்பட்ட பெண் குடியிருக்கும் காந்தி நகர் பகுதியில்தான் அந்த டிரைவரும் குடியிருந்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணை அவருக்கு ஏற்கனவே தெரியும் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
Average Rating