காதலனை மறக்க முடியாமல் திருமணமான 45 நாளில் புதுப்பெண் தற்கொலை..!!
திருமணமான 45 நாளில், காதலனை மறக்க முடியாமல் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மதுக்கரையைச் சேர்ந்த அகல்யா (19) என்பவருக்கும் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கோபு (32), (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த நவம்பர் 19ம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று அகல்யா தனது பெற்றோரை பார்க்க ஆசைப்பட்டு, அவர்களுக்கு போன் செய்துள்ளார்.
பின்னர், பெற்றோர் வருவதற்குள் தனது அறைக்கு சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அகல்யாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது வழியிலேயே அகல்யா இறந்தார்.
பின்னர் விசாரணையில், அகல்யாவிற்கு அடிக்கடி போன் வந்ததாகவும் அதனை கண்டித்ததாகவும் கோபு குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், அகல்யாவின் அறையில் இருந்து 6 பக்க கடிதம் ஒன்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் ஒன்று அவரது பெற்றோருக்கும், மற்றொரு கடிதம் காதலனுக்காக எழுதியது தெரியவந்துள்ளது.
காதலனுக்கு எழுதிய கடிதத்தில், சாகும் போதும் உன்னை காதலிக்கிறேன், பிளீஸ் பீல் மை லவ்’ என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு கடிதத்தில், உடலில் உயிர் எங்கே உள்ளது? உயிரில் காதல் எங்கே உள்ளது? உணர்வுகள் என்றால் என்ன? சந்தோஷம் என்றால் என்ன? கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’ என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டிருந்தார்.
கடைசியில் இதற்கு விடைதெரியாததால் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என கூறி, அப்பா, அம்மா உங்களைபற்றி சிலர் தவறாக பேசுகின்றனர். இது எனக்கு மனவருத்தமாக உள்ளது.
மேலும், நான் இறந்தால் உடலை பச்சாபாளையம் கொண்டு சென்று விடுங்கள், உங்கள் மகள் என மட்டும் பெயர் போட்டு போஸ்டர் அடித்து பச்சாபாளையத்தில் ஒட்டுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
Average Rating