கணவர் இரகசியமாக சேமித்த பணத்தை குப்பைகளுடன் எறிந்த மனைவி…!!
தனது மனைவிக்குத் தெரியாமல் நபர் ஒருவர் சேகரித்து வந்த ஆயிரக்கணக்கான யூரோ நாணயத்தாள்கள் அடங்கிய கைப்பையை, அவரின் மனைவி குப்பைகளுடன் சேர்த்து எறிந்த சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனியின் தென் பகுதியிலுள்ள பவேரியா பிராந்தியத்தின் நியூ ரம்பேர்க் நகரைச் சேர்ந்த 55 வயதான மேற்படி நபர், புத்தாண்டு தினத்தில் வீட்டிற்கு உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவதற்காக இப்பபணத்தை சேமித்து வந்தாராம்.
மனைவிக்கு தெரியாமலேயே சேமிக்க முடிவு செய்த அவர், வீட்டிலிருந்த பழைய கைப்பை ஒன்றில் தினமும் பணத்தை இரகசியமாக போட்டு சேமித்து வந்துள்ளார்.
ஆனால், புத்தாண்டை முன்னிட்டு வீட்டை முழுமையாக சுத்தப்படுத்த நினைத்த அவரின் மனைவி, அந்த பழைய கைப்பையையும் குப்பைகளுடன் சேர்த்துவிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை உள்ளூரிலுள்ள மீள்சுழற்சி நிலையமொன்றில் அந்த கைப்பையை அவர் எறிந்துவிட்டுத் திரும்பினார்.
அதன்பின் பின் வீட்டிற்கு திரும்பி வந்த கணவன், வீட்டில் மனைவியின் கைப்பை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவரிடம் உண்மையை கூறியுள்ளார்.
பெருந்தொகைப் பணத்தை இழந் ததை உணர்ந்து இது தொடர்பாக இருவரும் அழுது புலம்பியவாறு அருகே உள்ள பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை முறைப்பாடு செய்தனர்.
அதையடுத்து, பொலிஸார் மேற்படி மீள்சுழற்சி நிலையத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.
ஆனால், அந்த கைப்பை முதல்நாளே வீசப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்த இரு கொள்கலன் அளவிலான குப்பைகள் எரிக்கப்பட்டுவிட்டதாக அவர்களிடம் கூறப்பட்டது.
இத்தகவலைக் கேட்டு இத்தம்பதியினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். எனினும், எஞ்சியுள்ள மேலும் இரு கொள்கலன்களை ஆராய்வதற்கு மேற்படி நபருக்கு அதிகாரிகள் அனுமதியளித்தனர்.
வியப்புக்குரிய வகையில் மேற்படி கைப்பை முழுமையான நிலை யில் கொள்கலன் ஒன்றில் இருந்தது. அதற்குள் பணமும் அப்படியே இருந்தது.
இதையடுத்து, அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த தம்பதியினர் பெரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியதாக பவேரியா பொலிஸார் தெரிவித்துள்ள னர்.
Average Rating