மரத்திலிருந்த பெண்ணை பறவை என எண்ணி துப்பாக்கியால் சுட்ட நபர் கைது…!!

Read Time:2 Minute, 42 Second

14018Food-484160மர­மொன்றில் இலை­களை பறித்­துக்­கொண்­டி­ருந்த பெண் ஒரு­வரை பறவை என எண்ணி துப்­பாக்­கியால் சுட்ட நபர் ஒரு­வரை துருக்­கிய பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

65 வய­தான எதெம் கெனன் எனும் நபரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டவர் ஆவார். இவர் அண்­மையில் தனது நண்­பர்­கள் சகிதம் துப்­பாக்­கி­யுடன் கிளம்­பினார்.

இதன்­போது, மர­மொன்றை நோக்கி அவர் இரு தட­வைகள் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்தார். சில விநாடி­களில் பெண்­ணொ­ருவர் அல­றி­ய­வாறு மரத்­தி­லி­ருந்து வீழ்ந்தார்.

அப்­போது, அப்­பெண்ணை ஒரு பறவை என தான் எண்­ணி­விட்­ட­தாக மேற்­படி நபர் கூறி­னாராம்.

உடனே எதெம் கெனன் அங்­கி­ருந்து சென்­று­விட்டார். அதை­ய­டுத்து, அப்­பெண்ணின் கணவர் கூக்­கு­ர­லிட்ட நிலையில் அய­ல­வர்கள் விரைந்­து­வந்­தனர். பின்னர் பொலி­ஸாரால் எதெம் கெனன் கைது செய்­யப்­பட்டார்.

மேற்­படி பெண் ஒலிவ் இலை­களை பறிப்­ப­தற்­காக மரத்தில் ஏறி­யி­ருந்­தார். தலை­யிலும் வயிற்­றிலும் காய­ம­டைந்த அவர் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் அனு­ம­திக்­கப்­பட்டார். அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்­று­வ­ரு­வ­தாக டாக்டர் அஸ்கிம் டுஃபேக்கி தெரி­வித்­துள்ளார்.

உள்ளூர் தொலைக்­காட்­சி­யொன்­றுக்கு அப்பெண் அளித்த செவ்­வி­யில், “நான் ஒலிவ் இலை­களை பறித்­து­க்­கொண்­டி­ருந்தேன்.

திடீ­ரென வெடிச்­சத்தம் கேட்­டது. அதன்பின் எனது தலை­யி­லி­ருந்து இரத்தம் வடிந்­தது.

நான் அல­றி­ய­போது, அங்கு வந்த நபர், “நீங்கள் ஒரு பறவை என நினைத்­து­விட்டேன். நான் வேட்­டை­யில் ஈடு­பட்­டுள்ளேன்” எனக் கூறினார்.

நான் உயி­ருடன் இருப்­ப­தற்­காக கட­வு­ளுக்கு நன்றி. மேற்­படி நபர் தற்­போது விடு­விக்­கப்­பட்­டுள்­ளதாக அறிகிறேன்.

அவருக்கு எதிராக நான் முறைப்பாடு செய்வேன். என்னை எப்படி ஒரு பறவை என அவர் கருத முடியும்” எனத் தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரண தண்டனையை நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை (கடிதம் இணைப்பு)…!!
Next post பெங்களூரில் காதல் திருமணம் செய்த 14 வயது சிறுமி மர்மச்சாவு: கணவர் கைது..!!