பாகிஸ்தானில் வாகனங்கள் மோதியதில் சிலிண்டர் வெடித்து விபத்து: 14 பேர் பலி…!!
Read Time:1 Minute, 19 Second
பாகிஸ்தானில் பெஷாவரைச் சேர்ந்தவர்கள் தேரா இஸ்மாயில்கானில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். கந்தாகுர்ரம் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்ற போது அந்த வாகனம் எதிரே வந்த ஒரு வேன்மீது பயங்கரமாக மோதியது.
அதில் வேனில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கரமாக வெடித்தது. இந்த விபத்து காரணமாக மோதிய 2 வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 14 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.
அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் பலியானவர்களுக்கு கைபர் பக்துன்கவா மாகாண முதல் மந்திரி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
Average Rating