அணு ஒப்பந்தம் இறுதியானது: யுஎஸ்
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பில்லை என்றும், அந்த ஒப்பந்தம் இறுதியானது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிததனர். இதனையடுத்து இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், அமெரிக்க அரசியல் விவகாரத்துறை அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் இந்த ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் இறுதியானது என்றும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதற்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இருநாட்டின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.