மருமகள் எரித்துக்கொலை

Read Time:3 Minute, 9 Second

பேத்தி பிறந்த தின கொண்டாட்டத் தின் போது ஏற்பட்ட தகராறில் மருமகளை உயிரோடு எரித்துக் கொன்ற மாமியாரை போலீசார் கைது செய்தனர். கொருக்குப்பேட்டை மூப்பனார் நகரில் வசிப்பவர் மாடசாமி (வயது 30). ஸ்டீல் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மங்கையர்க்கரசி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 9 வருடம் ஆகிறது. 2 குழந்தைகள் இருக்கிறார்கள். மாடசாமியின் தாயார் கன்னியம்மாள் (வயது 55) மகன் வீட்டில் இருந்து வந்தார். இவருக்கும் மருமகள் மங்கையர்க்கரசிக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மங்கையர்க்கரசியின் 2வது மகள் சித்ரா (வயது 4)வின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அருகாமையில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சித்ராவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கன்னியம்மாள் விருப்பப்பட்டார். இதற்கு மங்கையர்க்கரசி மறுக்கவே மாமியா ருக்கும், மருமகளுக்கு மிடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சில வீடுகள் தள்ளி வசிக்கும் மங்கையர்க்கரசியின் தாயார் வந்து கன்னியம்மாளுடன் சண்டை போட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு வழியாக சமாதானம் ஆனது. அவர் தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடி மங்கையர்க்கரசி வீட்டில் இருந்து அலறியவாறு வெளியே ஓடிவந்தார். அதைப் பார்த்ததும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

உடனடியாக மங்கையர்க்கரசியை அக்கம்பக்கத்தாரும் அவருடைய தாயார் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மங்கையர்க்கரசி அளித்த மரண வாக்குமூலத்தில், தனக்கு ஆதரவாக தனது தாயார் வந்து சண்டை போட்டதால் ஆத்திர மடைந்த மாமியார் கன்னியம்மாள் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்ததாக கூறினார்.

இதைத்தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மங்கையர்க்கரசி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆர்.கே. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கன்னியம்மாளை கைது செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அணு ஒப்பந்தம் இறுதியானது: யுஎஸ்
Next post விறகுவெட்டும் போது நல்லபாம்பு கடித்ததால் விறகுவெட்டி ஒருவர் பலியானார்.