ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு…!!
Read Time:1 Minute, 0 Second
ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசார்–இ–ஷெரிப்பில் இந்திய தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த தூதரகத்திற்குள் நேற்று முன் தினம் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்திய தூதரகத்திலிருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள ஜலாலாபாத் என்ற இடத்தில் சற்று முன் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த இடத்திற்கு அருகில்தான் பாகிஸ்தான் கவுன்சில் ஜெனரல் இல்லம் அமைந்துள்ளது.
இந்திய தூதரகத்தைக் குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெறவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating