அமெரிக்காவில் இன வெறியால் சீக்கியர் குத்திக்கொலை…!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரஸ்னோ நகரைச் சேர்ந்தவர் குர்சரண்சிங் கில் (68). சீக்கியரான இவர் அங்குள்ள பிராந்தி கடையில் பணிபுரிந்தார்.
புத்தாண்டு தினத்தன்று இவர் பிராந்தி கடையில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய குர்சரண்சிங்கை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பிரஸ்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இனவெறி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. எனவே இனவெறி கொலையாக இச்சம்பவத்தை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் 2016–ம் ஆண்டில் பிரஸ்னோ நகரின் முதல் கொலை வழக்காக பதிவாகியுள்ளது.
கடந்த டிசம்பர் 28–ந் தேதி இதே போன்று வயதான சீக்கியர் ஒருவர் பிரஸ்னோ நகரில் 2 பேரால் தாக்கப்பட்டார். அது குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தாக்குதலுக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
Average Rating