சீனா: பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி..!!

Read Time:1 Minute, 5 Second

timthumbசீனாவில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த பயணிகள் 14 பேர் பலியாகியுள்ளனர்.

நின்க்சியா மாகாணத்தின் தலைநகரான யின்சுவானில் இன்று காலை 7 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பத்து நிமிடங்களில் தீயை அணைத்தனர். இதில் 14 பேர் பலியாகியுள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சீனாவில் மன நிலை சீர்குலைவு மற்றும் சமூகத்தின் மீதான ஆத்திரம் காரணமாக அண்மைக்காலமாக பேருந்து எரிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரில் வீட்டுக்கு சென்ற பெண் துஷ்பிரயோகம்..!!
Next post நாடு திரும்பிய பெண் வீடு திரும்பவில்லை – மாமனார் புகார்…!!