இளம் கர்ப்பிணி பாலியல் துஷ்பிரயோகம்! பல்கலை விரிவுரையாளர் விளக்கமறியலில்…!!
இளம் கர்ப்பிணி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
35 வயதான விரிவுரையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டு பலாங்கொடை மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதான கர்ப்பிணி ஒருவரின் முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சமனலவெவ பொலிஸ் நிலையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ள 29 வயதுடைய இளம் கர்ப்பிணி, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டுக்கமைவாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரான 35 வயதுடைய விரிவுரையாளரை நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர். சமனல வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Average Rating