சேலத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை…!!

Read Time:3 Minute, 40 Second

b1ec8f2a-452f-4e7d-82d9-04828d792b8c_S_secvpfசேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 50). மியூசிக் டீச்சரான இவர் பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு இசை கற்று கொடுத்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 38). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி கீழே விழுந்து விட்டார். இதற்கு அவர் ஆபரேசன் செய்து வீட்டில் படுத்து இருந்தார். நேற்று மாலை ஆனந்த் வெளியில் சென்று விட்டார். அப்போது அவரது வீடு தீப்பிடித்து எரிந்தது.

இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் தண்ணீர் கொண்டு வந்து கொட்டி தீயை அணைத்தனர். ஆனால் தீயை அவர்களால் அணைக்க முடியவில்லை. தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் பொதுமக்கள் இதுபற்றி சேலம் கிச்சிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீவிபத்தை அறிந்த சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடம் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது வீட்டுக்குள் விஜயலட்சுமி உடல்கருகி இறந்து கிடந்தார். இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தீவிபத்தை அறிந்த விஜயலட்சுமியின் கணவர் ஆனந்த் அங்கு விரைந்து வந்து மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். இது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த தீவிபத்தால் வீட்டு கூரை மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டு இருக்கும் என போலீசார் முதலில் கருதினர். ஆனால் சிலிண்டர் அப்படியே இருந்தது. பின்னர் போலீசார் விஜயலட்சுமி இறந்து கிடந்த இடம் அருகில் இருந்து மண்எண்ணை கேன் ஒன்றை கைப்பற்றினர். இந்த கேனில் இருந்த மண்எண்ணையை தன் மீது விஜயலட்சுமி ஊற்றி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசாருக்கு தெரியவந்தது. பிறகு விஜயலட்சுமியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:–

தற்கொலை செய்து கொண்ட விஜயலட்சுமி மன உளச்சலில் இருந்துள்ளார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்த அவர், காலில் ஏற்பட்ட வலியாலும் அவதிப்பட்டு வந்தார். இந்த காரணங்களால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம். அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என்றும் அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்: ஜப்பான் போர்க்கோலம்…!!
Next post அம்மாடியோ! இது என்ன புது வித்தையா இருக்கு…!!