நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்ட மாப்பிள்ளை: இளம்பெண்ணுடன் பெற்றோர் தற்கொலை..!!

Read Time:2 Minute, 16 Second

Suicide Awarenessராஜஸ்தான் மாநிலத்தில் தனது மகளுக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை திடீரென திருமணத்தை ரத்து செய்து விட்டதால் அவமானம் தாங்காமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டம், ஆதித்யா அவாஸ் பகுதியைச் சேர்ந்த திக்‌ஷா(21) என்ற பெண்ணுக்கும், ஜெய்ப்பூரில் உள்ள மாளவிகா நகரை சேர்ந்த கமல் என்பவருக்கும் திருமணம் செய்ய கடந்த ஆண்டு நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி திக்‌ஷாவின் தந்தைக்கு திடீரென போன் செய்த மாப்பிள்ளை கமல், உங்கள் மகளை திருமணம் செய்துகொள்ள முடியாது என தடாலடியாக கூறிவிட்டார்.

இதனால், திக்‌ஷாவின் குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துப்போய் விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில் திக்‌ஷாவுடன் சேர்ந்து அவரது தந்தை ஹேமந்த் சட்வானி, தாயார் காந்தா ஆகியோர் விஷம் குடித்த நிலையில் வீட்டுக்குள் மயங்கி விழுந்துக் கிடந்தனர்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்து வீட்டினர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் மூவரும் நேற்று பின்னிரவு உயிரிழந்தனர். இச்சம்பவம் ஆதித்யா அவாஸ் பகுதியில் வசிப்பவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “பறக்கும் தட்டு” குறித்த மர்மத்தின் உண்மையை வெளிப்படுத்துவாரா ஹிலாரி…?
Next post கொளத்தூர் அருகே குறி சொல்லும் சாமியாரை அடித்து உதைத்த 11 பேர் கைது…!!