65 வயது பெண்ணை ஏழு இடங்களில் குத்தி கொலை செய்ய முயற்சித்த 40 வயது பெண்..!!
Read Time:1 Minute, 4 Second
பழைய கோபம் காரணமாக 65 வயதான வயோதிபப் பெண்ணை ஏழு இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த 40 வயதுப் பெண்ணை இம்மாதம் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் டி.எம்.சீ.எம். தனன்சூரிய உத்தரவிட்டார்.
சீதுவ லியனகே முல்லையைச் சேர்ந்த அய்ராங்கனி சில்வா என்ற பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.
கத்திக்குத்து காயங்களுக்குள்ளான இந்தப் பெண்ணும் சீதுவையைச் சேர்ந்தவராவார்.
இவர் அபாயகரமான நிலையில் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றன
Average Rating