சப் இன்ஸ்பெக்டர் அடித்ததால் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரி..!!

Read Time:1 Minute, 39 Second

download (1)ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கோதாவரி பாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். பொலிஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 4–ந் திகதி தனது கிராமத்தில் சிலருடன் சேர்ந்து சீட்டு விளையாடினார். கிரகவரம் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் பத்ரராவ் விரைந்து வந்து ஸ்ரீனிவாஸ் உள்பட 3 பேரை பிடித்தனர்.

வொலிஸ் நிலையம் அழைத்து செல்லும் வழியில் பொலிஸ்காரர் ஸ்ரீனிவாசை சப் இன்ஸ்பெக்டர் பத்ரராவ் அடித்து உதைத்தார். பொதுமக்கள் முன்னிலையில் அடித்து தரக்குறைவாக பேசினாராம்.

இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஸ்ரீனிவாஸ் வயலுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு வெளியே சென்றார்.

ரேங்கரை என்ற இடத்தில் லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகே குயன்பாளையத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தனது டவலில், எனது சாவுக்கு சப் இன்ஸ்பெக்டர் பத்ரராவ் தான் காரணம் என்று எழுதி இருந்தார். அவர் அடித்ததால் அவமானம் அடைந்ததாக கூறியிருந்தார். பொலிஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மர்ம பொருட்கள் காரணமாக ஜெர்மனி பிரதமர் அலுவலகம் மூடப்பட்டது…!!
Next post லிபியா போலீஸ் பயிற்சி மையத்தில் குண்டு வெடிப்பு: 50 பேர் பலி…!!