காரைக்குடி அருகே 14 வயது மாணவியை சீரழித்த தந்தை கைது: போலீசார் விசாரணை…!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு ரெயில்வே ஸ்டேசன் ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கருப்பாயி. இவர் களது 14 வயது மகள், கானாடுகாத்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாரிமுத்துக்கு குடி பழக்கம் உண்டு. தினமும் இரவில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். போதை தலைக்கேறிய நிலையில் அவர் தனது மகளிடம் பாலியல் தொல்லை செய்து சீரழித்ததாக கூறப்படுகிறது. இதனால் நாளடைவில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.
பின்னர் சிறுமியை சிகிச்சைக்காக தாயார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு நடந்த பரிசோதனையில் சிறுமி, 2 மாத கர்ப்பம் என தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த தாயார் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த தகவல் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியவரவே, பயந்துபோன சிறுமியின் தாய், இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சிறுமியின் தந்தை மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமி தொடர்ந்து காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெற்ற மகள் என்றும் பாராமல் அவளது வாழ்க்கையை தந்தையே சீரழித்த சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating