சமைக்கும்போது பம்ப் ஸ்டவ் வெடித்ததால் இளம்பெண் பலி

Read Time:1 Minute, 3 Second

சமைக்கும்போது பம்ப் ஸ்டவ் வெடித்ததால் இளம்பெண் உடல் கருகி பலியானார். செய்யூர் அருகே பவுஞ்சூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவருடைய மகள் பெயர் வனஜா (வயது 22). சமைக்கும்போது திடீரென பம்ப் ஸ்டவ் வெடித்தது. இந்த சம்பவத்தில் வனஜாவின் சேலையில் தீப்பற்றி மளமளவென உடல் முழுவதும் தீ பரவியது. வலியால் துடித்த வனஜாவை செய்யூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக வனஜா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு வனஜா இறந்தார். இது குறித்து செய்யூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பள்ளி மாணவி தீக்குளிப்பு
Next post பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க இந்திய தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு