சமைக்கும்போது பம்ப் ஸ்டவ் வெடித்ததால் இளம்பெண் பலி
Read Time:1 Minute, 3 Second
சமைக்கும்போது பம்ப் ஸ்டவ் வெடித்ததால் இளம்பெண் உடல் கருகி பலியானார். செய்யூர் அருகே பவுஞ்சூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவருடைய மகள் பெயர் வனஜா (வயது 22). சமைக்கும்போது திடீரென பம்ப் ஸ்டவ் வெடித்தது. இந்த சம்பவத்தில் வனஜாவின் சேலையில் தீப்பற்றி மளமளவென உடல் முழுவதும் தீ பரவியது. வலியால் துடித்த வனஜாவை செய்யூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக வனஜா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு வனஜா இறந்தார். இது குறித்து செய்யூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.