குட்டி ஆமைகளை கடத்த முற்பட்டவர் சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது…!!
Read Time:57 Second
நட்சத்திர ஆமை இனத்தை சேர்ந்த 40 குட்டி ஆமைகளை நாட்டிலிருந்து கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் தாய்லாந்து நோக்கி செல்லவிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய சிலாபம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் காணப்பட்ட ஆமைகள் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், 2 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Average Rating