உ.பி.யில் கற்பழிப்பு குற்றவாளியை அடித்துக் கொன்றதாக 9 பேர் கைது…!!

Read Time:1 Minute, 35 Second

a69858f6-a56a-4e97-8c3d-1e7e8affc48f_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் கற்பழிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை அடித்துக் கொன்ற கிராம மக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இங்குள்ள கேரிகுஷ்நாம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்(30). நேற்று இவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அஜித் சிங்கை பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

காயங்களுடன் இருந்த அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதுவரை ஒன்பது பேரை கைது செய்து, கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேவேளையில், இறந்துப்போன அஜித் மற்றும் அவரது கூட்டாளிமீது பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கற்பழிப்பு புகார் அளித்துள்ளனர், இதுதொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்: ஜம்மு-காஷ்மீரிலும் உணரப்பட்டது…!!
Next post ஐந்து பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு…!!