பதன்கோட் தாக்குதல்: தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானிடம் அமெரிக்கா கண்டிப்பு…!!

Read Time:1 Minute, 49 Second

26da698b-d55b-41d0-80aa-3082b0d52a6c_S_secvpfபஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் உள்ள விமானப் படை தளத்தில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

விமானப்படை தள தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியது. அதை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்க அரசுத்துறை கண்டிப்புடன் கூடிய தகவல் அனுப்பியுள்ளது. அதில், ‘‘பதன்கோட் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் (தீவிரவாதிகள்) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு சாதகமாக செயல்படக் கூடாது.

ஏற்கனவே அளித்த வாக்குறுதிபடி விரைவாக நடவடிக்கை எடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஆதரவாக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெக்சிகோ சிறையில் இருந்து தப்பிய போதை பொருள் கடத்தல் தாதா மீண்டும் சிக்கினான்…!!
Next post சீனாவில் மருத்துவமனை புல்டோசரால் இடிப்பு: 6 பேர் பலி…!!