4 வயது சிறுமியை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த சிறுவன் தலைமறைவு…!!

Read Time:1 Minute, 57 Second

fdgfgfஇந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் 14 வயது சிறுவனால் நான்கு வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள ரியாவ்லி கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அருகாமையில் வசித்துவரும் சுமார் 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் இனிப்புகள் தருவதாக ஆசைகாட்டி ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததோடு, கொடூரமான முறையில் அடித்து, உதைத்து சித்ரவதை செய்த பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள ரதேன்புரி பொலிசார், காயமடைந்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ரியாவ்லி கிராமத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மடிப்பாக்கம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி…!!
Next post மருத்துசவரின் தாக்குதலில் நோயாளி உயிரிழப்பு…!!