அரசு ஆஸ்பத்திரியில் டாக்டருக்கு கொலை மிரட்டல்: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் கைது…!!

Read Time:2 Minute, 33 Second

2e0cfc82-32e9-4ca9-8e46-1e9a9621b7be_S_secvpfவில்லிவாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரதாப்ராஜ் ஆகிய 2 பேர் கத்திக்குத்து காயங்களுடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களை அவசர சிகிச்சை பிரிவான 201–வது வார்டில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

ஆனால் சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதாக கூறி அவர்களுடன் வந்தவர்கள் டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் 4 பேர் தகாத வார்த்தையில் கடுமையாக பேசி டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் ஏராளமான முதுநிலை மருத்துவம் படிக்கும் டாக்டர்கள், பாதுகாப்பு கோரி மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்ததால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அனைவரும் கடுமையாக அவதிப்பட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஆஸ்பத்திரி டீன் விமலா போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் கைது செய்வார்கள் என்று டீன் உறுதி அளித்ததின் பேரில் உள்ளிருப்பு போராட்டத்தை டாக்டர்கள் வாபஸ் பெற்றனர்.

இதை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கொலை மிரட்டல் விடுத்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சபரி, சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களான இவர்கள் 2 பேர் மீதும் அநாகரீகமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், தமிழ்நாடு மருத்துவ பாதுகாப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் சக்திவேல், பிரதீப் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குட்டி விமானம் மூலம் உலகை சுற்றி வந்த பெண் விமானி: 21 ஆயிரம் கி.மீ. பறந்து சாதனை…!!
Next post விந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய இனவிருத்தி உறுப்பு…!!