பொலிஸ் சேவைக்கான புதிய கொள்கை விரைவில் அறிமுகம்…!!
Read Time:1 Minute, 15 Second
பொலிஸ் சேவைக்கு புதிதாக ஆட்களை இணைத்தல், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றிற்கான புதிய கொள்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கொள்கைக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்தவுடன் அதனை அமுலாக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸ் கான்ஸ்டபில், பொலிஸ் கான்ஸ்டபில் சாரதி ஆகிய பதவிகளுக்காக புதிதாக ஆட்களை இணைத்துக் கொள்ளுதல் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் தொடர்பில் புதியகொள்கை தயாரிக்கப்பட்டுவருதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
புதிய கொள்கை தயாரிக்கப்பட்டவுடன் அதனை அனுமதிக்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
Average Rating