காட்டில் கிடந்த யானைத் தந்தத்தை வைத்திருந்த பெண்ணுக்கு அபராதம்…!!
Read Time:1 Minute, 19 Second
காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட யானைத் தந்தத்தினை சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்திருந்ததாக தெரிவித்து மூதூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பெண்ணொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவர் தோப்பூர்- 06ம் வட்டாரத்தைச் சேர்ந்த 42 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கெதிரான வழக்கு மூதூர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
அவரிடமிருந்து கைப்பற்றபட்டது யானைத் தந்தம் தானா என்பதை பரிசோதனை செய்வதற்காக தேசிய மிருகக் காட்சிசாலை திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அது யானைத் தந்தம்தான் என அவ் திணைக்களம் அறிவித்ததையடுத்து மூதூர் நீதிவான் ஜ.என்.றிஸ்வான் இத் தீர்பினை இன்று வழங்கினார்.
Average Rating