வணிக வளாகத்தில் புகுந்து 8 பேரை சுட்டுக் கொன்ற வாலிபர்

Read Time:2 Minute, 10 Second

4959291.gifஅமெரிக்காவில் உள்ளது நெப்ரஸ்கா நகரம். இங்குள்ள வணிக வளாகம் ஒன்றுக்குள் 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நுழைந்தார். 3-வது மாடிக்கு சென்ற அவர் பொருள் வாங்குவது போல அங்கும் இங்கும் சென்றார். திடீரென அவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அங்கு நின்றிருந்தவர்களை நோக்கி கண் மூடித்தனமாக சுட்டார். கையில் வைத்திருந்த குண்டு தீரும் வரை 35 தடவை சுட்டார். இதனால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள். 8 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர் அடுத்த மாடிக்கு சென்று தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கியால் சுட்டதும் தீவிரவாதி தாக்குதல் நடத்துவதாக பீதி ஏற்பட்டது. எனவே வணிக வளாகத்துக்குள் இருந்தவர்கள் மறைவான இடங்களுக்கு ஓடி ஒளித்தனர். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். தற்கொலை செய்து கொண்ட அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவர் தீவிரவாதியாக இருக்குமோ என்று கருதி விசாரித்தனர். ஆனால் அவர் தீவிரவாதி அல்ல உள்ளூர் வாலிபர் என்று தெரிய வந்தது. அவரது பெயர் ராபர்ட் ஹாவ் கின்ஸ் என்று கண்டுபிடித்தனர். எதற்காக இப்படி வெறித்தனமாக நடந்து கொண்டார் என்று தெரியவில்லை. இந்த நகருக்கு அமெரிக்க அதிபர் புஷ் வந்திருந்தார். அவர் நகரை விட்டு சென்ற சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போலீஸ் செக்ஸ் சித்ரவதையால் தற்கொலை: தடவியல் சோதனைக்கு பெண் என்ஜினீயர் கடித நகல்
Next post வேப்ப மரத்தில் வடிந்த பால் – மக்கள் பரவசம், பூஜை