48 வாழைப்­ப­ழங்­களை உண்ண வைத்து திருடனிடமி­ருந்து தங்­கத்தை மீட்ட பொலிஸார்…!!

Read Time:1 Minute, 45 Second

tyuuyuஇந்­தி­யாவின் மும்பை பகு­தியில் திரு­டனின் வயிற்றில் இருந்த தங்கச் சங்­கி­லியை 48 வாழைப்­ப­ழங்­களை உண்ண வைத்து பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

மகா­ராஷ்­டிர மாநிலம் மும்­பையின் புற­நகர் பகு­தி­யான கட்­கோ­பரில் கடந்த வாரம் ஒரு பெண்­ணி­ட­மி­ருந்து 25 கிராம் எடை கொண்ட தங்கச் சங்­கி­லியைப் பறித்துக் கொண்டு ஒரு நபர் தப்பியோடி­யுள்ளார்.

இதை­ய­றிந்த அப்­ப­குதி மக்கள், அந்த நபரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்­து அப்­ப­கு­தியில் ரோந்துப் பணியில் ஈடு­பட்­டி­ருந்த பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர்.

கோபி ஆர் கவாரே (25) என்ற அந்த நபர் வதாலா பகு­தியைச் சேர்ந்­தவர் என விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்ளது.

மேலும், பயத்தில் அந்த சங்­கி­லியை விழுங்­கி­விட்­ட­தாக தெரி­வித்­துள்ளார். இதை­ய­டுத்து, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்­ததில், அந்தப் பெண்­ணி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட தங்கச்சங்­கிலி அவ­ரது வயிற்றில் இருப்­பது தெரி­ய­வந்­தது.

பின்னர் அவரை ஒரு கூடை வாழைப்­ப­ழங்­களை (48) கட்­டா­யப்­ப­டுத்தி உண்ண வைத்­துள்­ளனர். அவர் மலம் கழித்தபோது, அந்த சங்கிலி வெளியில் வந்துள்ளது. பின்னர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெக்ஸிகோவில் பஸ் விபத்து; 16 பேர் பலி…!!
Next post முத்தமிட்ட இளம்பெண்ணை கடித்த மலைப்பாம்பு : 8 தையல்…!!