தட்டிப் போன வாய்ப்பு!-மீண்டும் பிடித்தார் நயன்தாரா
ஜன்னலோரமாக ஏறி கர்சீப்பை போட்டு இடம் பிடிக்காத குறைதான்! முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கிற வாய்ப்பை பிடிக்க என்னென்னவோ செய்ய வேண்டியிருக்கிறது நடிகைகளுக்கு! விஜயுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கைநழுவி போனதிலிருந்து கண் கொத்தி பாம்பாக கவனித்து வந்த நயன்தாரா, அவரின் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை அதிகாரபூர்வமாக கைபற்றி விட்டார். ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிக்க, விஜய் நடிக்க, பிரபுதேவா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க அட்வான்சே வாங்கிவிட்டாராம் நயன்தாரா. குருவி படத்திற்காக அட்வான்ஸ் வாங்கிய பிறகும் கூட நயன்தாரா விலகிப் போக நேர்ந்ததற்கு வருத்தம் தெரிவித்திருந்த விஜய், தன் அடுத்த படத்தில் நிச்சயமாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறியிருந்தாராம். இதற்கிடையில் நயன்தாராவும் தயாரிப்பாளரிடம் தன் மேனேஜரை அனுப்பி பேச்சு வார்த்தை நடத்த, பெருந்தொகை ஒன்று அட்வான்சாக கைமாறியிருக்கிறதாம். குருவியின் இறுதிகட்ட பணிகளின் போது புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரலாம்! அப்போது த்ரிஷாவின் மனசு மறுபடியும் புகையலாம். யார் கண்டது?