தர்மபுரி அருகே 113 வயது மூதாட்டி மரணம்…!!
Read Time:1 Minute, 12 Second
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சின்னமாட்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (வயது 113). இவருடைய கணவர் முனுசாமி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய ஒரே மகள் சரஸ்வதி. கிருஷ்ணம்மாளின் மகள் வழியில் 5 தலைமுறைகளை சேர்ந்த 117 பேரன்– பேத்திகள் உள்ளனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் அண்மையில் கிருஷ்ணம்மாளின் பிறந்த நாளை ஒன்றாக சேர்ந்து கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணம்மாள் நேற்று மரணம் அடைந்தார். 100–க்கும் மேற்பட்ட பேரன் – பேத்திகள், மூதாட்டி கிருஷ்ணம்மாளின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.
Average Rating