10–ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற விவகாரம்: ஆட்டோ டிரைவர் கைது…!!

Read Time:1 Minute, 47 Second

b5a246dc-0e94-41be-a0d1-b4cddf69c4bc_S_secvpfகோவையை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவி சந்தியா வயது (வயது 16) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான மணிகண்டன் (27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது.

நெருங்கி பழகியதன் காரணமாக சந்தியா கர்ப்பம் அடைந்தார். சந்தியா குண்டாக இருந்ததால் அவரது கர்ப்பம் வெளியே தெரியவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி மாணவி கர்ப்பத்தை மறைத்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் மாணவி வயிற்று வலி என்று கூறினார். இதையடுத்து அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்த போது தான் மாணவி கர்ப்பமாக இருப்பதும், வயிற்று வலி அல்ல, அது பிரசவ வலி என்றும் தெரிய வந்தது.

இதைக்கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று காலை 7 மணியளவில் மாணவி சந்தியாவுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் மணிகண்டன் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதான்கோட் தாக்குதல்: பாகிஸ்தானில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது…!!
Next post மும்பையில் இருந்து 2 லட்சம் டாலர் கடத்திவந்த விமானி அமெரிக்காவில் கைது…!!