முன்னாள் காதலர் மீது ஆசிட் வீசியதாக பெண் கைது…!!
Read Time:1 Minute, 16 Second
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னூரை சேர்ந்தவர் அப்ரீன் (வயது 19) இவரும் ஹரித்துவாரில் பணியாற்றி வந்த அதே ஊரை சேர்ந்த சுராஜ் (வயது 22) என்ற வாலிபரும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர்.
கல்லூரியில் படிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுராஜ் தனது வீட்டில் பார்த்த அதே கிராமத்தை சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் கோபம் அடைந்த அப்ரீன் தனது முன்னாள் காதலர் மீது ஆசிட்டை வீசினார். இதில் சுராஜின் முகம் மற்றும் உடல்பகுதிகள் கருகின. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுராஜ், தற்போது 50 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
சுராஜ் அளித்த புகாரின் பேரில் அப்ரீனை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.
Average Rating