80 இலட்சம் ரூபா பெறுமதியான “பியற் 407″ காரை ஜனாதிபதி முரளிதரனுக்கு கையளிப்பார்!
Read Time:1 Minute, 15 Second
கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்துள்ள முத்தையா முரளிதரனுக்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அன்பளிப்பாக வழங்கும் 80 இலட்சம் ரூபா பெறுமதியான “பியற் 407″ காரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையளிக்கவுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முரளிதரன் இந்த உலக சாதனையைப் படைப்பாரென எதிர்பார்க்கப்பட்டதால் அன்றைய தினம் அங்கு வைத்து முரளிக்கு இந்தக் காரை ஜனாதிபதி கையளிக்கவிருந்தார். எனினும் மழைகாரணமாக முரளி சாதனை படைப்பதில் தாமதமேற்பட்டதால் முரளிக்கு ஜனாதிபதி கார் பரிசளிப்பது ஒத்திவைக்கப்பட்டது. அஸ்கிரிய டெஸ்ட் முடிவடைந்து இலங்கை அணி கொழும்பு திரும்பியதும் எதிர்வரும் ஏழாம் திகதி அலரிமாளிகையில் வைத்து இந்தக் காரை ஜனாதிபதி முரளிக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.