பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு…!!
Read Time:1 Minute, 21 Second
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகிகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நிதவான் உத்தரவிட்டார்.
கடந்த 2005.12.25 ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை எதிர்வரும் 26ம் திகதி கிழக்கு மாகாண சபை அர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
Average Rating