சென்னை பல்கலைக்கழகத்தில் 2–வது மாடியில் நின்று மாணவர் தற்கொலை மிரட்டல்…!!

Read Time:1 Minute, 34 Second

07429109-c294-42f5-b435-40b9d1e4d7ab_S_secvpfசென்னை பல்கலைக் கழகத்தில் கடந்த சில நாட்களாகவே மாணவர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.

சமீபத்தில் அங்கு நடந்த கருத்தரங்கில் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக பல்கலைக் கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இதனால் பல்கலைக் கழகத்துக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. இருப்பினும் மாணவர்கள் வெளியில் செல்லாமல் அங்கேயே தங்கியிருந்து சமையல் செய்தும் சாப்பிட்டனர்.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக 2–வது மாடியில் நின்றபடி ராஜ்குமார் என்ற மாணவர் இன்று காலை தற்கொலை மிரட்டல் விடுத்தார். எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வரும் அவர் மாடியில் நின்றபடியே கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டினார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் விரைந்தனர். அவர்கள் ராஜ்குமாரிடம் சமாதான பேச்சு நடத்தி வருகிறார்கள். பல்கலைக்கழகத்தில் இருந்து வரும் பிரச்சனை காரணமாகவே அவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை விமானப்படைக்கு விரைவில் புதிய போர்விமானம்…!!
Next post உலக உணவு திட்டத்தினால் இலங்கைக்கு 20 மில்லியன் டொலர்கள்…!!