சேலத்தில் பெற்ற தாயை கொடுவாளால் வெட்டி கொல்ல முயன்ற மகன்…!!

Read Time:2 Minute, 9 Second

27a18b65-0b10-428b-a7ff-cf4797cd4bb9_S_secvpfசேலம் அருகே உள்ளது கன்னங்குறிச்சி. இங்குள்ள கன்னியாத்தெருவை சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 75).

இவரது மகன் செந்தில் (வயது 45). இவர் மனநிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் இவரை அவரது தாயார் மாரியம்மாள் டாக்டர்களிடம் காண்பித்து சிகிச்சை அளித்து வந்தார்.

ஆனால் செந்தில் திடீர் திடீரென சத்தம் போட்டு கத்துவார். ஆட்களை பிடித்து அடித்து விடுவார். இதனால் செந்திலை வீட்டிலேயே வைத்து இருந்தனர். வெளியில் எங்கும் விடாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பெரியம்மாள் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் பகுதியில் படுத்து இருந்தார்.

அப்போது அங்கு செந்தில் வந்தார். பின்னர் அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கோவிலில் தேங்காய் உடைக்க வைத்து இருந்த கொடுவாளை எடுத்து வந்து பெரியம்மாளை சரமாரியாக தாக்கினார்.

இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்து விட்டார். இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு வந்து செந்திலை விரட்டி விட்டனர். பின்னர் பெரியம்மாளை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சேலம் கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் சரவணன், சப்–இன்ஸ்பெக்டர்கள் மணி, உலகநாதன் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த தாக்குதல் சம்பவம் கன்னங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கு ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: புல்லட் ரெயில் சேவை நிறுத்தம்…!!
Next post எம்பிலிப்பிட்டிய மோதல் அறிக்கை சமர்பிக்கப்பட்டது…!!