ஆல்ப்ஸ் மலை பனிச்சரிவில் சிக்கி பள்ளிக்குழந்தை பலி…!!
Read Time:1 Minute, 6 Second
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலை பனி படர்ந்திருக்கும் சுற்றுலா தலமாகும். இங்கு குவியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பனிச் சறுக்கு விளையாடி மகிழ்வது வழக்கம்.
இந்த நிலையில், இன்று ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாடுவதற்காக பள்ளிக்குழந்தைகள் 10 பேர் கொண்ட குழுவாக பெரியவர் ஒருவர் துணையுடன் சென்றிருந்தனர். அப்போது அங்கு திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி 14 வயதுள்ள ஒரு பள்ளிக்குழந்தை இறந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பனிச்சரிவில் சிக்கிய இந்த 11 பேரில் 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Average Rating