5 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த சென்னை போலீஸ்காரர்: பாதிக்கப்பட்ட பெண் புகார்…!!

Read Time:4 Minute, 24 Second

a13a3756-df47-4e59-a625-6708a1f9b53a_S_secvpfசென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் கவிதா (வயது 35). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது சொந்த ஊர் கும்பகோணம். எனது முதல் கணவர் ராமச்சந்திரன் மூலம் எனக்கு 2 மகன்கள் உள்ளனர். எனது முதல் கணவர் என்னைவிட்டு பிரிந்து ஸ்ரீபெரும்புதூரில் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்தார். அவர்மீது புகார் கொடுக்க ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையம் சென்றேன்.

அங்கு வேலைபார்த்த போலீஸ்காரர் ஒருவர், என்னிடம் விசாரணை நடத்தும்போது அன்பாக பேசினார். நாளடைவில் அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர், என்னை காதலிப்பதாக சொன்னார். அறந்தாங்கியில் உள்ள மாரியம்மன் கோவிலில் 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாலி கட்டி என்னை திருமணம் செய்துகொண்டார்.

நானும், அவரும் ராஜா அண்ணாமலைபுரத்தில் வாடகை வீட்டில் வசித்தோம். பின்னர் அவர் பா.ஜனதா கட்சி பிரமுகர் ஒருவருக்கு மெய்காப்பாளராக வேலைபார்த்தார். எனது 10 சவரன் நகைகளை அவர் விற்றுவிட்டார். மேலும் எனது வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.18 லட்சத்தை எடுத்து மோசடி செய்துவிட்டார்.

தற்போது அவர் என்னோடு வாழவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. போலீஸ் துறையில் விசாரித்தபோது, கடந்த 6 மாதமாக அவர் வேலைக்கு வரவில்லை என்று தெரியவந்துள்ளது.

அவரைப்பற்றி விசாரித்தபோது, எனக்கு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளது. அவர் ஏற்கனவே 4 பெண்களை மணந்து அவர்களோடு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து நகை, பணத்தை மோசடி செய்தவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அவர் முதலில் திலகவதி என்ற பெண்ணை மணந்துள்ளார். அதன்மூலம் திலகவதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திலகவதியுடன் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்துவருவதாக அறிகிறேன். அதன்பின்னர் மதுரை திருப்பரங்குன்றத்தில் பெண் போலீஸ் காளியம்மாளை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். காளியம்மாளின் பெயரை ஜனனி என்று மாற்றி, அவரிடமும் 40 பவுன் நகையும், ரூ.11 லட்சத்தையும் ஏமாற்றியுள்ளார்.

அதன்பிறகு விஜிதா என்ற பெண்ணையும் என்னைப்போல் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்கவந்தபோது காதலித்து 3-வதாக மணந்து ஏமாற்றியுள்ளார் விஜிதாவோடு சேத்துப்பட்டில் 2 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளார். பின்னர் விஜிதாவையும் கைகழுவிவிட்டார். அதேபோல இன்னொரு பெண்ணையும் அவர் ஏமாற்றிவிட்டதாக அறிகிறேன்.

5-வதாக என்னையும் அவர் ஏமாற்றியுள்ளார். சட்டைகளை மாற்றுவதுபோல, பெண்களை மணந்து அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவரது இந்த மோசடியான உல்லாச வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மேலும், பல பெண்களை அவர் மோசடி செய்ய திட்டமிட்டதாக அறிகிறேன். அவரது திட்டத்தை தடுத்து நிறுத்த அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு கவிதா மனுவில் தெரிவித்துள்ளார்.

கவிதாவின் புகார் மனு மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவனின் உயிரைக் காவு வாங்கிய டி.வி சீரியல்…!!
Next post ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறல்: மன்னிப்பு கேட்டு சரணடைந்த அமெரிக்க வீரர்கள்: வீடியோ…!!