கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர சோதனை சாவடிகள் அகற்றப்படுகின்றன…!
Read Time:1 Minute, 5 Second
கொழும்பில் அமைக்கப்பட்டிருக்கும் நிரந்தர சோதனைச் சாவடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பிற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வெள்ளவத்தை, இராஜகிரிய மற்றும் ஹைலெவல் வீதியில் உள்ள சோதனைச் சாவடிகள் அகற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை இந்நடவடிக்கையானது பொதுமக்கள் மத்தியில் பலத்த கேள்விகளை தோற்றுவித்துள்ளதுடன் நீதி மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களிடையே உள்ள முரண்பாட்டின் வெளிப்பாடா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.