வங்க தேசத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!
Read Time:1 Minute, 23 Second
வங்காளதேசத்தில் அண்மையில் வழிபாட்டு தலங்களின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் துப்பாக்கியால் சுட்டதில் வெளிநாட்டினர் 2 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு அந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஜமாத்–உல்– முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த நிலையில், வழிபாட்டு தலங்களில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் இந்த தீவிரவாதிகளை பிடிப்பதற்காக நேற்று முன் தினம் வங்காளதேச போலீசார் தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவின் போது, போலீசாரை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக கையெறி குண்டுகளை வீசினார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், அந்த அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் பலியாகினர்.
இந்த தகவலை வங்காளதேச உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
Average Rating