சீனா பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி…!!

Read Time:1 Minute, 24 Second

044f2377-4d92-42e8-a7c0-1ad0796661fe_S_secvpfசீனாவில் அண்மைக்காலமாக பட்டாசு ஆலை தீ விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று அங்குள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் ஹூணன் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

படுகாயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சட்டவிரோதமான வெடிபொருட்களை தயாரிக்கும் ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹவாய் தீவில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல்: 12 பேர் கதி என்ன…?
Next post குழந்தையுடன் சென்ற தாயாரை கற்பழிக்க முயன்ற நபர்: மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த துணிச்சல்…!!