ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக மன்னாரில் இடம்பெற்ற அகழ்வுப்ப பணி தோல்வி…!!
Read Time:1 Minute, 7 Second
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளினால் நிலத்துக்கு அடியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக மன்னார் தோட்டக்காடு பிரதேசத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்றன.
மன்னார் பொலிசாரினால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா அகழ்வு நடவடிக்கைகளுக்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
அதன்படி தொல்பொருள் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் நேற்று (14) அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுள்ளன.
எவ்வாறாயினும் தேடுதல் மேற்கொண்டதில் எவ்வித ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன் நீதவானின் உத்தரவுப்படி அந்த இடத்தை மீண்டும் மூடி விடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
Average Rating